புளூ சட்டையை போட்டுட்டு வந்து உன் படத்தை என்ன பண்றேன் பார் ; மாறனை அலறவைத்த பாரதிராஜா

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் […]

Continue Reading

“டாக்டர்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !

தமிழக சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கியுள்ள “டாக்டர்” திரைப்படம், ரசிகர்களிடையேயும் வர்த்தக வட்டாரங்களிடையேயும் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது. இப்படத்தை Sivakarthikeyan Productions உடன் இணைந்து, KJR Studios சார்பில் கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பட வெளியீட்டை ஒட்டி, படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தது. இந்நிகழ்வில் நடிகர் சுனில் ரெட்டி பேசியதாவது…. இந்தப்படத்தில் ரௌடியாக நடிக்கிறாயா […]

Continue Reading

விஜய், அஜித்தை வைத்து வெற்றிகரமான படங்களை இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் -விஜய் ஆண்டனி

ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கோடியில் ஒருவன்’. இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்குப் பிறகு மக்கள் அதிக அளவில் திரையரங்குகளுக்கு வந்த படம் ‘கோடியில் ஒருவன்’ என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தது படக்குழு. இந்த விழாவில் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நாயகன் விஜய் ஆண்டனி […]

Continue Reading

“இந்தப்படத்தில் யாருடைய மனதையும் புண்படுத்தவில்லை”-‘ருத்ர தாண்டவம்’ பத்திரிகையாளர் சந்திப்பில் ராதா ரவி

ஜி.எம்.ஃபிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் மோகன் ஜி தயாரித்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ருத்ர தாண்டவம்’. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார். இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஃபாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிகையாளர் […]

Continue Reading

“Why do you want to fight with me, when you don’t want me to do action films?” – Santhanam at Parris Jayaraj Press Meet

After receiving mixed reviews for his previous release ‘Biskoth’, the comedian turned actor Santhanam is all set for his next release ‘Parris Jayaraj’ directed by K. Johnson. Johnson’s directorial debut ‘A1’ starring Santhanam in lead, said to have received well by the audience. This is the duo’s second film together. Actress Anaika Soti who was […]

Continue Reading

தமிழ் ராக்கர்ஸ்சுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த – டைரக்டர் ரமேஷ் செல்வன்.

என் படத்தை திருட்டு வீடியோ எடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று தமிழ் ராக்கர்ஸ்சுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார், டைரக்டர் ரமேஷ் செல்வன். தமிழகத்தை உலுக்கிய ஒரு இளம்பெண்ணின் கொலை வழக்கை கருவாக வைத்து உருவான படம், ‘சுவாதி கொலை வழக்கு.’ இந்த பெயருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் படத்தின் பெயர், ‘நுங்கம்பாக்கம்’ என்று மாற்றப்பட்டது. இதுபற்றிய அனுபவங்களை டைரக்டர் ரமேஷ் செல்வன் பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:- “இரண்டரை வருட போராட்டத்துக்குப்பின், ‘நுங்கம்பாக்கம்’ படம் திரைக்கு […]

Continue Reading

திருமண மண்டபமாக்குவோம் என்பதா? தியேட்டர் அதிபர்களுக்கு பாரதிராஜா கண்டனம்.

கோரிக்கைகளை ஏற்காமல் திரையரங்குகளை திருமண மண்டபமாக்குவோம் என்பதா? என்று தியேட்டர் அதிபர்களுக்கு பாரதிராஜா கண்டனம் தெரிவித்து உள்ளார். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தை சென்னையில் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா நேற்று திறந்து வைத்தார். இதில் டி.ஜி. தியாகராஜன், டி.சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, நிதின் சத்யா, எஸ்.ஆர்.பிரபு, சி.வி.குமார் உள்ளிட்ட பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாரதிராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “கொரோனாவால் இடையில் நிற்கும் படங்களுக்கு நடிகர்-நடிகைகள் முன்னுரிமை கொடுத்து […]

Continue Reading

சமூகத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர் சூர்யா – சௌந்தரராஜா பேட்டி

      தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்திருக்கிறார். இவர் ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல், சமூக சேவையிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருந்து வருகிறார். மண்ணுக்கும் மக்களுக்கும் சமூக நல அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.   […]

Continue Reading

எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறை யூடிப்பில் ஆவணமாக மாற்றிய நடிகர் ஜெ. எம். பஷீர் ..!

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் ஜெ. எம். பஷீர். அதிமுகவை சேர்ந்த இவர் பொதுவாகவே சமூக அக்கறையுடன் பல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை வீடியோவாக உருவாக்கி கடந்த மார்ச் மாதம் வெளியிட்டார் பஷீர். இந்தநிலையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் அருமை பெருமைகளை இந்த இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் விதமாக தற்போது, ‘ஹிஸ்ட்ரி ஆப் லெஜன்ட் எம்.ஜி.ஆர்’ (History of Legent […]

Continue Reading

சூர்யா எடுத்திருக்கும் இந்த முடிவு வரவேற்க கூடியது – இயக்குனர் பாரதிராஜா

டைரக்டர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘’சமீபகாலமாக ஒருதிரைப்படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பு அந்த தயாரிப்பாளர் படும் கஷ்டங்களை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த மாற்று வழிதான் ஓ.டி.டி. வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் இது போன்ற மாற்று தளங்களை தவிர்க்க முடியாது. தியேட்டருக்கு மக்கள் வரத் தயக்கம் காட்டுவதில் முதல் பிரச்சினை தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப்கான், பார்க்கிங் விலை அதிகம். ஒருசாமானிய மனிதன் எப்படி ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து […]

Continue Reading