full screen background image
Search
Tuesday 30 April 2024
  • :
  • :
Latest Update

திரையை விலக்கிய திரையரங்க உரிமையாளர்கள்

T

மத்திய அரசால் ஜூலை 1 முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும் ஒரே வரி அமல்படுத்தப்பட்டது. இதில் திரைப்பட கட்டணங்களுக்கு 18-28 சதவீதம் வரையிலான வரி விதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 30 சதவீத வரியை தமிழக அரசு விதித்தது.

மாநில அரசு விதித்த இந்த 30 சதவீத வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்துவது என திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன் படி ஜூலை 3ம் தேதியில் இருந்து திரையரங்க உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று அமைச்சர்களுடன், திரையுலக பிரதிநிதிகளின் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் அரசு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் இணைந்த கமிட்டி அமைத்து, கட்டணம் குறித்த பிரச்சனைகளை முடித்துக் கொள்வது என்ற முடிவு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், திரையரங்கங்கள் நாளை முதல் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தார்.