சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘டாக்ஸிக்’ முன்வெளியீட்டு விழா

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைத்து உருவாகியுள்ள இப்படம், ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் தொடர்ந்து ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் ரசிகர்களை நேரடியாகச் சந்தித்து தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்தும் நோக்கில், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன்வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
தமிழ் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக நடைபெற்ற இந்த விழா, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்தது. யாஷின் பிரம்மாண்டமான திரை ஆளுமை, கீது மோகன்தாஸின் தனித்துவமான கதை சொல்லல் மற்றும் படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வு அந்த எதிர்பார்ப்புக்கு மேலும் வலு சேர்த்தது.
விழாவில் ‘டாக்ஸிக்’ படக்குழுவினர் கலந்து கொண்டு, படம் உருவான விதம், தங்களது கதாபாத்திரங்கள், படத்தின் உலகம் மற்றும் தமிழ் ரசிகர்களுடனான தங்களது எதிர்பார்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில், பாடலாசிரியர், இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசியதாவது..,
“இங்கு நிற்பது எனக்கு மிகப்பெரிய பெருமை. யாஷ் சார் நான் மிகவும் ரசிக்கும் ஒரு ஐகான். முதலில் இப்படத்திற்காக ஒரு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் இன்னொரு பாடலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. மொத்தமாக இப்படத்திற்காக மூன்று பாடல்களை எழுதியுள்ளேன்.
யாஷ் சாருக்கு இந்தியா முழுவதும், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். டாக்ஸிக் திரைப்படத்தின் மூலம் அவரது புகழ் உலகளவில் இன்னும் பெரிய அளவில் சென்றடையும் என்று நம்புகிறேன்.
வெங்கட் சார் நமது மாண்புமிகு முதல்வர் விஜய் சாரின் Jananayagan படத்தை தயாரிக்கும்போது பல்வேறு சவால்களையும் போராட்டங்களையும் எதிர்கொண்டார். படம் ஆன்லைனில் கசிந்தபோதும் அவர் மிகவும் உறுதியுடன் இருந்தார். தமிழக மக்கள் எப்போதும் உங்களுடன் இருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
கீதுமோகன்தாஸ் மேம் எனக்கு குடும்ப நண்பர் போன்றவர். இப்படத்தை உருவாக்க உங்களிடம் இருந்த தைரியமும் துணிச்சலும் அளப்பரியது. இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.
நடிகர் சுதேவ் நாயர் பேசியதாவது..,
“கடைசியாக ‘காட்டான்’ தொடருக்காக தமிழ்நாடு வந்திருந்தேன். அது எனக்குப் பிடித்த படைப்பு. விஜய் சேதுபதி சாருடன் நடித்தது மறக்க முடியாதது. இப்போது எனக்குப் பிடித்த யாஷ் சாருக்காக மீண்டும் இங்கு வந்திருக்கிறேன். ‘டாக்ஸிக்’ படத்திற்கு முன்பு இருந்த என்னையும், ‘டாக்ஸிக்’ படத்திற்குப் பிறகு உருவாகப் போகும் என்னையும் நானே பார்க்கிறேன். இந்தப் படத்தின் நட்சத்திரக் குழுவினரிடம் இருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். நான் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் உத்வேகம் அளிக்கும் மனிதர் யாஷ் சார்.” இப்படம் எல்லோருக்கும் புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.
நடிகை ருக்மிணி வசந்த் பேசியதாவது..,
“வணக்கம் சென்னை! ‘டாக்ஸிக்’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். யாஷ் சார், நீங்கள் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். அதில் நானும் ஒருவர். உங்கள் ரசிகையாக இருந்த என்னுடைய பயணம், தற்போது உங்களுடன் இணைந்து நடிக்கும் சக நடிகையாக மாறியிருப்பது உண்மையிலேயே மிகவும் சிறப்பானது. கீது மோகன்தாஸ் மேடம், இப்படியொரு திரைப்படத்தை உருவாக்கும் துணிச்சல் உங்களுக்கு இருக்கிறது. தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி.”
நடிகை ஹுமா குரேஷி பேசியதாவது..,
“நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். இங்கு வருவது எப்போதுமே எனக்கு மிகவும் ஸ்பெஷலானது. நான் எங்கு சென்றாலும், பலரும் என்னை ‘கண்ணம்மா’ என்று அழைக்கிறார்கள். ‘டாக்ஸிக்’ என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒரு அங்கம். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக எனது நேரத்தை செலவிட்டிருக்கிறேன்.
கீது மோகன்தாஸ் மேடம் இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, கதாபாத்திரம் குறித்து அதிகம் எதையும் சொல்லவில்லை. ‘என்னை நம்பு’ என்று மட்டும் கூறினார். அவர் சொன்னதைப் போலவே ஒரு அசத்தலான படைப்பை கொடுத்திருக்கிறார். இந்தப் படத்தின் பயணத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. ஆனால் KVN Productions இப்படத்தை மிகவும் அழகாக வடிவமைத்திருக்கிறது.
இந்தப் படத்திற்காக கியாரா அத்வானியின் உழைப்பு அசாதாரணமானது. கர்ப்பமாக இருந்த காலத்திலும் கூட அவர் இந்தப் படத்திற்காக உழைத்திருக்கிறார். நட்சத்திரங்கள் இருக்கிறார்கள், சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு ‘ராக்கிங் ஸ்டார்’ மட்டுமே இருக்கிறார்; அது யாஷ் சார். அவர் திரையுலகை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்கிறார்.
இந்தப் பிரம்மாண்டமான படைப்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
நடிகை கியாரா அத்வானி பேசியதாவது..,
“சென்னைக்கு நான் வருவது இதுதான் முதல் முறை. நீங்கள் அனைவரும் எனக்கு அளித்த வரவேற்பு என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தின் பணிகளைத் தொடங்கினோம். அப்போது வெங்கட் சார் பிறந்தநாளையும் கொண்டாடினோம். தற்போது படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. தயாரிப்பாளர் வெங்கட் சாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
எங்கள் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் மற்றும் இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. அதைவிட முக்கியமாக, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னுடன் நடித்த அனைத்து சக நடிகர்களும் தங்களது திறமையால் அசத்தக்கூடியவர்கள்.
ஒரு பெண்ணின் கனவு மற்றும் பார்வையின் காரணமாகத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். அது கீது மோகன்தாஸ் மேடம். இந்திய சினிமா உங்கள் பெயரை என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு யாஷ் சார் இந்திய சினிமாவை உலகளவிலான உயரத்திற்கு கொண்டு செல்லப் போகிறார். இந்தப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும் நன்றி.”
இயக்குநர் கீது மோகன்தாஸ் பேசியதாவது..,
“எனக்கு 4 வயதாக இருந்தபோதே எனது சினிமா பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். எனது முதல் படத்தை முடித்தபோது, என்னால் இரண்டாவது படத்தை இயக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை. அதே நிலை மீண்டும் தொடர்ந்தது. ஆனால் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான யாஷ் சார் என் மீது நம்பிக்கை வைத்து, ‘நீங்கள் இதை செய்யுங்கள்’ என்று கூறினார்.
‘படையப்பா’ உள்ளிட்ட பல மாஸ் மற்றும் கமர்ஷியல் திரைப்படங்களை எனக்கு ரெஃபரன்ஸாக யாஷ் சார் காட்டினார். ‘டாக்ஸிக்’ திரைப்படம் யாஷின் 2.0 வெர்ஷனாக இருக்கப் போகிறது. அனைவருக்கும் நன்றி. “
தயாரிப்பாளர் KVN Productions வெங்கட் நாராயணன் பேசியதாவது..,
“‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக, எனது கடினமான காலகட்டத்தில் எனக்கு ஆதரவாக நின்ற தளபதி விஜய் சாரின் ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய் சார், சினிமாவில் இது தனது கடைசி படமாக இருக்கும் என்று கூறியிருந்தார். ஆனால் விஜய் சார் தற்போது திரையில் இல்லாததை மிகவும் வெறுமையாக உணர்கிறேன். எனவே, அவர் மீண்டும் திரையில் நடிக்க வர வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்.
‘டாக்ஸிக்’ ஒரு புதிய பாதையை உருவாக்கும் படமாக இருக்கும். கீது மோகன்தாஸ் இப்படத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் முற்றிலும் வேறொரு அனுபவமாக இருக்கும். நயன்தாராவுக்கு என்று தனி ஒரு ஆரா இருக்கிறது. அவரது கதாப்பாத்திரம் திரையில் மிகப்பெரிய மாஸை உருவாக்க போதுமானது கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹுமா குரேஷி மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் அசாத்தியமான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
யாஷ் சார் இந்தப் படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். நீங்கள் உண்மையிலேயே அசாத்தியமானவர் சார்; அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். உங்கள் திரைப்பயணத்தில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு மைல்கல்லாக அமையும்.
‘டாக்ஸிக்’ முற்றிலும் மாறுபட்ட ஓர் உலகம். ‘டாக்ஸிக்’ உலகத்திற்குள் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம். நன்றி”
நடிகர் யாஷ் பேசியதாவது ..,
“தமிழ் மக்களே, நீங்கள் எப்போதுமே எனக்கு அளவில்லாத அன்பை வழங்கி வருகிறீர்கள். ‘KGF’ படத்தில் நடித்தபோது எனக்கு நீங்கள் அளித்த அன்பு அளப்பரியது. அப்போது என்னை அன்புடன் வரவேற்றீர்கள். தமிழ் மக்களுக்கு தலைவணங்குகிறேன்.
‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தபோது, அது தயாரிப்பாளருக்கு மிகவும் வேதனையான தருணமாக இருந்தது. ஆனால் அப்போதும் நீங்கள் காட்டிய அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதது. விஜய் சாருக்கு நீங்கள் காட்டும் அன்பும் அப்படித்தான்.
நீங்கள் சினிமாவை மிகவும் நல்ல முறையில் அணுகுகிறீர்கள். ‘டாக்ஸிக்’ என்பது ஆர்வம் மற்றும் உணர்வுகளைப் பற்றிய திரைப்படம். இது முற்றிலும் வித்தியாசமான ஓர் உலகம். இந்தப் படம் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்.
சினிமா என்பது கன்னடம், தமிழ் அல்லது தெலுங்கு என்று மட்டும் பிரிந்தது அல்ல. அது இந்திய சினிமா. அந்த வகையில் இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் ஒரு புதிய அனுபவம் தரும் அனைவருக்கும் நன்றி.
இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் சுற்றி உருவாகியுள்ள உறவுகள் மற்றும் மோதல்கள், ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வழக்கமான கேங்ஸ்டர் படங்களிலிருந்து வேறுபடுத்தும் அம்சங்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கீது மோகன்தாஸ் தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கதை சொல்லல் மூலம் ‘டாக்ஸிக்’ திரைப்படத்திற்கென ஒரு இருண்ட, அடர்த்தியான மற்றும் பிரம்மாண்டமான உலகத்தை உருவாக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பிரம்மாண்டமான கலை இயக்கம், கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் என, திரைப்படம் மிகப்பெரிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியிருப்பது டிரெய்லர் மூலம் தெரிய வருகிறது.
ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. இதன் மூலம் யாஷின் ரசிகர் வட்டத்தை தாண்டி, இந்திய அளவில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் ஆகஸ்ட் 26, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
