full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

அஞ்சலி பாட்டீல் இயக்கும் மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்

காலா படத்தில் புயல் சாருமதியாக வந்து ரசிகர்களை கவர்ந்தவர் அஞ்சலி பாட்டீல். அவரிடம் தொடர்ந்து தமிழில் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு சர்வதேச ஆவணப்படம் ஒன்றை இயக்கி வருகிறேன்.

அடுத்த மாதம் திருவண்ணாமலையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. ‘மேரே பியாரே பிரைம் மினிஸ்டர்’னு ஒரு படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு டிசைனரும்கூட. கவிதைகள் எழுதுவேன். தமிழில் நிறைய படங்களில் நடிக்கும் ஐடியா இருக்கு.

புயல் மாதிரி புரட்சி கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல் வேறுவகை கதாபாத்திரங்களுக்கும் காத்திருக்கிறேன். ஏஞ்சலினா ஜுலி மாதிரி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படம் பண்ணணும் என்பது நீண்ட நாள் கனவு’ என்று கூறி இருக்கிறார்.