full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

இந்த கேள்வியை எதாச்சும் ஹீரோகிட்ட கேட்பீங்களா? – பிரியா ஆனந்த்!

தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, ஒரு ஊருல ரெண்டு ராஜா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் பிரியா ஆனந்த். தற்போது இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அதிலும் குறிப்பாக மலையாளத்தில் நிவின் பாலி ஜோடியாக இவர் நடிக்கும், “காயங்குளம் கொச்சுண்ணி” படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படமாகும்.

இந்நிலையில் ஒரு பேட்டியொன்றில், திருமணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பொரிந்து தள்ளி இருக்கிறார் பிரியா ஆனந்த்,

“ஒரு இளம் கதாநாயகனிடம் திருமணம் எப்போதென்று யாராவது கேள்வி கேட்டிருக்கிறீர்களா?. நடிகைகளிடம் மட்டும் ஏன் இந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்?.
நிறைய வீடுகளில் பெண்கள் வேலைக்குச் சென்று குடும்பத்தை கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களை ஏன் ஒரு இடத்தில் கட்டிப் போட நினைக்கிறீர்கள்?” என சராமாரியாக கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளார்.

கல்யாணம் எப்போனு கேட்டது ஒரு குத்தமாம்மா!