full screen background image
Search
Sunday 5 May 2024
  • :
  • :
Latest Update

தமிழுக்கு முழுக்கு போடும் முடிவில் நடிகை

ஹீரோக்கள் தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இல்லாமல் எதையாவது பேசி மாட்டிக்கொள்வது வழக்கம். அந்த லிஸ்ட்டில் ஒரு நடிகையும் சேர்ந்து சென்னை பக்கமே வரக்கூட முடியாமல் தவிக்கிறாராம். சமீபத்தில் நடந்த பைனான்சியர் வழக்கு விவகாரத்தில் பெரிய ஹீரோக்களே வாயைத் திறக்காமல் இருக்க, அந்த பூர்ணமான நடிகை பைனான்சியரை விமர்சித்து ட்விட் போட்டாராம். அப்போதே நடிகையை பலரும் எச்சரித்தார்களாம். ஆனால் அவரோ ‘நான் உண்மையை தானே சொன்னேன்’ என்று சமாளித்தாராம்.

இப்போது பைனான்சியரின் வெயிட்டை தெரிந்துகொண்ட நடிகை சென்னை பக்கம் வரவே பயப்படுகிறாராம். தமிழுக்கே மூட்டை கட்டிவிட வேண்டியதுதான் போல என புலம்புகிறாராம்.